தேசிய தெளஹீத் ஜமா அத்தின் நிதி விவகாரங்களைக் கையாண்டவர் என்று சொல்லப்படும் சஹ்ரானின் நெருங்கிய சகா மொஹம்மட் அலியார் என்பவர் காத்தான்குடியில் கைதுசெய்யப்பட்டார் எனப் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
காத்தான்குடியில் வைத்து நேற்று அவரைக் கைதுசெய்துள்ளதாகப் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.