சமூக வலைத்தளங்கள் மீண்டும் முடக்கம்!
இலங்கையில் ‘பேஸ்புக்’ உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களும் முற்றாக முடக்கப்பட்டுள்ளன.
நீர்கொழும்புப் பகுதியில் இரு இனத்தவர்களுக்கிடையில் ஏற்பட்ட வன்முறையை அடுத்து சமூகவலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன.
மேலும், சமூக வலைத்தளங்கள் ஊடாக இன வன்முறையைத் தூண்டும் வகையிலான கருத்துக்களைப் பகிர்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர அறிவித்துள்ளார்.