முடங்கிய சுற்றுலாத்துறை மீண்டும் எழுகிறது – 52 ரஸ்யா பயணிகள் வருகை

உயித்த்தெழுந்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்திற்குப்பின்னர் இன்று ரஷ்யாவிலிருந்து சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

மொஸ்கோ தலை நகரிலிருந்து 52 சுற்றுலா பயணிகளே இவ்வாறு ரஷ்யாவுக்குச் சொந்தமான எஸ் யூ 6265 விமானத்தின் மூலம் இன்று காலை பண்டாரநாக்க ச்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல் குறித்து தாம் அறிந்திருந்த போதிலும் தாம் திட்டமிட்ட படி இலங்கைக்கான பயணத்தை மேற்கொண்டதாக இவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஈஸ்டர் திருநாளன்று இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களையடுத்து நாட்டின் சுற்றுலாத்துறை முற்றாக ஸ்தம்பிதமடைந்திருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *