துப்பாக்கி ரவைகளுக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லையாம்! – ஹிஸ்புல்லா கூறுகின்றார்
பாதுகாப்புத் தரப்பினரால் மீட்கப்பட்ட துப்பாக்கி ரவைகளுக்கும் தனக்கும் இடையில் எவ்வித சம்பந்தமும் கிடையாது என்று கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
மட்டக்களப்பு, காத்தான்குடியில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாவின் அலுவலகம் இன்று சுற்றிவளைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது 48 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. இதையடுத்து, சந்தேகத்தின் பேரில் அங்கு நின்ற இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து ஹில்புல்லாவால் விடுக்கப்பட்டுள்ள விளக்க அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.