பொலிஸார் தேடி வந்த மற்றுமொரு லொறியும் சிக்கியது; மூவர் கைது!
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து தேடப்பட்டு வந்த மற்றுமொரு லொறி பொலனறுவையில் இன்று காலை கைப்பற்றப்பட்டுள்ளது.
EPPX – 2399 என்ற இலக்கத்தகடுடன் குறித்த லொறி கைப்பற்றப்பட்டது எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
சந்தேகத்துக்கிடமான லொறியுடன் 3 சந்தேகநபர்களையும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கைதுசெய்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட லொறியின் படத்தை ‘லங்காதீப’ இணையத்தளம் வெளியிட்டுள்ளது.