மன்னாரிலும் இராணுவம் சுற்றிவளைப்புத் தேடுதல்! – மௌலவி உட்பட 12 பேர் கைது

மன்னாரில் மௌலவி உட்பட 12 பேர் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு பொஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பான தௌஹீத் ஜமா அத் அமைப்பின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் குறித்த 12 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மன்னாரில் நேற்றுக் காலை முதல் மாலை வரை முன்னெடுக்கப்பட்ட இராணுவத்தினரின் சுற்றிவளைப்புத் தேடுதலின்போது புதுக்குடியிருப்புப் பகுதியில் வைத்து சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட மௌலவி உள்ளிட்ட 12 சந்தேகநபர்களும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இன்று காலை முதல் மன்னாரின் பல்வேறு இடங்களில் இராணுவத்தினர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *