பொலிஸ் ஊரடங்கு இன்றிரவு இல்லை!

கடந்த 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று ​கொழும்பு, மட்டக்களப்பு, நீர்கொழும்பு பிரதேசங்களில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களையடுத்து அன்றிலிருந்து நேற்று வரை இரவு நேரங்களில் நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டு வந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டமானது இன்றிரவு அமுல்படுத்தப்படாது எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர அறிவித்தார்.

எனினும், கல்முனை, சம்மாந்துறை, சாய்ந்தமருது, சவளக்கடை ஆகிய பிரதேசங்களில் நேற்றுமுன்தினம் இரவு தொடக்கம் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் இன்று காலை 10 மணியளவில் தளர்த்தப்பட்டு, மாலை 5 மணி தொடக்கம் மறு அறிவித்தல் வரை அமுல்படுத்தப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *