பொலிஸாரினால் தேடப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் பெண் தீவிரவாதியும் கைது!

இலங்கைப் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த – ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தால் நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புபட்டுள்ளார் எனக் கருதப்படும் பெண் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைப் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் உறுப்பினர் எனக் கருதப்படும் பெண் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண் மாவெனெல்ல – மாரவில பகுதியில் வைத்து நேற்றுக் கைதுசெய்யப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகின்றது.

அண்மையில் கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புகளினால் 250 இற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருந்தனர். 500 பேர் வரையில் படுகாயமடைந்திருந்தனர்.

இந்தநிலையில், தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் சிலரின் புகைப்படங்களை வெளியிட்டிருந்த பொலிஸார், பொதுமக்களின் உதவியையும் நாடியிருந்தனர்.

மொஹமட் சாதிக் அப்துல் ஹக், பாத்திமா லதீபா, மொஹமட் ஷாஹித் அப்துல் ஹக், புலஸ்தினி ராஜேந்திரன் எனப்படும் சாரா, அப்துல் காமர் பாத்திமா காதியா, மொஹமட் காசிம் மொஹமட் ரில்வான் ஆகிய நபர்களே பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த சந்தேகநபர்களாவர்.

இவர்களில் மொஹமட் சாதிக் அப்துல் ஹக், மொஹமட் ஷாஹித் அப்துல் ஹக் ஆகிய இரு இளைஞர்களும் நாவலப்பிட்டிப் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் உறுதிப்படுத்தியிருந்தனர்.

இந்தநிலையில், பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த பாத்திமா லதீபா என்ற பெண் மாவெனெல்ல – மாரவில பகுதியில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *