கல்முனைப் பிரதேசம் முழுவதும் மறு அறிவித்தல் வரும்வரை ஊரடங்குச் சட்டம் அமுல்
சம்மாந்துறை, கல்முனை, சவளக்கடை பகுதியில் மறு அறிவித்தல் வரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
கல்முனை சாய்ந்தமருது பிரதேசத்தில் தற்போது நிலவும் பதட்டமான சூழ்நிலையினையடுத்தே குறித்த இந்த ஊரடங்குச் சட்டம் அமுலுக்கு கொண்டுவரப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
இதேநேரம் சாய்ந்தமருது பகுதியில் தேடுதல் நடவடிக்கையின் போது துப்பாக்கிச் சூடு இடம்பெற்றது. சம்மாந்துறைப் பகுதியிலும் பெருந்தொகையான வெடி பொருட்கள் மீட்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.