பேராயர் – சம்பந்தன் சந்திப்பு!

கொழும்பு உயர் மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பு கொழும்பு பேராயர் இல்லத்தில் நடைபெற்றது.

கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டார்.

இதன்போது, கடந்த ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்களைக் குறிவைத்து இடம்பெற்ற வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் பேசப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *