தற்கொலைக் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய 139 பேர் அடையாளம்! – சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு

உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் 8 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய 139 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி தலைமையில் இன்று (25) நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

நாடு முழுவதும் பாதுகாப்பு செயற்பாடுகளுக்காக நாளை (26) முதல், பாதுகாப்பு அமைச்சில், ஒருங்கிணைந்த செயற்பாட்டு மையம் ஒன்று இயங்கும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *