பலியானோர் எண்ணிக்கை 310 ஆக உயர்வு! – 38 பேர் கைது
நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 310 ஆக உயர்வடைந்துள்ளது. 500 பேர் காயமடைந்துள்ளனர் .
அத்துடன், குண்டுவெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புபட்டனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இதுவரை 38 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 26 பேர் குற்றப்புலனாய்வுத் துறையாலும், 3 பேர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினாலும், 9 பேர் பொலிஸாராலும் கைது செய்யப்பட்டவர்கள்.
இவர்களில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 9 பேர் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மே 6 வரை விலக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த 9 பேரும் வெல்லம்பட்டி என்ற இடத்தில் உள்ள ஒரே தொழிற்சாலையில் வேலை செய்துவந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.