பலியானோருக்கு தலா 10 இலட்சம் ரூபா நஷ்டஈடு!

குண்டு வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தவர்களின், உறவினர்களுக்கு நஷ்டஈடாக பத்து இலட்சம் ரூபா வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

அலரிமாளிகையில் இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் ராஜித சேனாரத்ன மேற்படி தகவலை வெளியிட்டார்.

” குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு நஷ்டஈடாக தலா 10 இலட்சம் ரூபா வீதம் அவர்களின் உறவினர்களிடம் கையளிக்கப்படும். இறுதிக் கிரியைகளுக்காக ஒரு இலட்சம் ரூபா வீதம் வழங்கப்படும்.

காயமடைந்தவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாவீதம் வழங்கப்படும். ” என்றும் கூறினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *