பிரிட்டன் கோடீஸ்வரரின் 3 பிள்ளைகள் உயிரிழப்பு!
இலங்கையில் நேற்று இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் பிரிட்டனின் பிரபல கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் நான்கு பிள்ளைகளில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
பிரிட்டனின் எஸ்.ஏ. ஓ.எஸ். நிறுவனத்தின் அதிக பங்குகளுக்கு உரிமையாளரான Anders Holch povlsen தனது மனைவி மற்றும் நான்கு பிள்ளைகளுடன் இலங்கைக்கு சுற்றுலா வந்தபோதே இந்த அனர்த்தத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.
பிரிட்டனின் இரண்டாவது மிகப் பெரிய காணி உரிமையாளரான Anders Holch povlsen டென்மார்க் பிரஜை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.