கும்பிடப்போன இடத்தில் கைகலப்பு; வாள்வெட்டு! – 8 பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில்

வல்வெட்டித்துறை, கம்பர்மலை முத்துமாரி அம்மன் ஆலயத்தில் கரகம் எடுப்பதில் ஏற்பட்ட முரண்பாட்டால் இரண்டு தரப்புகளுக்கு இடையே இடம்பெற்ற கைகலப்பு மற்றும் வாள்வெட்டில் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றது.

வடமராட்சி, வல்வெட்டித்துறை, கம்பர்மலை முத்துமாரி அம்மன் ஆலயத்தில் கரகம் எடுப்பதில் இரண்டு தரப்புகளுக்கு இடையே முரண்பாடு ஏற்பட்டது. அது கைகலப்பாக மாறி வாள்வெட்டில் முடிந்ததில் 8 பேர் படுகாயமடைந்தனர்.

அவர்கள் ஊரணி மற்றும் மந்திகை வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *