மதுஷின் உறவினர் உட்பட 6 பேர் இன்று நாடு கடத்தல்!
பிரபல போதைப்பொருள் வர்த்தகர் – பாதாள உலகக் குழுத் தலைவர் மாக்கந்துர மதுஷுடன் டுபாயில் கைதுசெய்யப்பட்ட அவரின் உறவினர் ஒருவர் உள்ளிட்ட 6 பேர் இன்று (17ஆம் திகதி) அதிகாலை நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
குறித்த 6 பேரும் இன்று அதிகாலை 4.50 மணியளவில் டுபாயிலிருந்து நாட்டை வந்தடைந்தனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டை வந்தடைந்த சந்தேகநபர்களைக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் பொறுப்பேற்றுள்ளது.
இதேவேளை, மதுஷுடன் கைதுசெய்யப்பட்ட 31 சந்தேகநபர்களில் 21 பேர் இதுவரை நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.