அரசு கூறினாலும் வடக்கில் படை விலக்கல் நடக்காதாம்! – இராணுவம் இறுமாப்பு

“வடக்கு மாகாணத்திலிருந்து இருந்து படைகளை முழுமையாக விலக்கும் கோரிக்கையை நடைமுறைப்படுத்த முடியாது. அரசு கூறினாலும் இதை நாம் செய்யவே மாட்டோம்.”

– இவ்வாறு இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்றிடம் அவர் மேலும் கூறியுள்ளதாவது:-

“அரசு எத்தகைய முடிவை எடுக்கின்றதோ அதனை நாங்கள் நடைமுறைப்படுத்துவோம். வடக்கில் இருந்து படையினரை நடத்துவதாக இருந்தாலும், அந்த உத்தரவையும் நாங்கள் பின்பற்றுவோம். எவ்வாறாயினும், வடக்கு மாகாணத்தில் இருந்து படையினரை முழுமையாக விலக்கும் கோரிக்கையை செயற்படுத்த முடியாது” – என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *