36 தொழிலாளர்களை துரத்தி துரத்தி கொட்டின குளவிகள்!
கொட்டகலை டிரேட்டன் தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த 35 பெண் தொழிலாளர்களும், ஒரு ஆண் தொழிலாளரும் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இவர்கள், கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர் என்று திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் 08.04.2019 அன்று மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
தேயிலை மரத்தில் இருந்த குளவி கூடே இவ்வாறு கலைந்து வந்து தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
க.கிசாந்தன்