மே 30 இல் உலகக்கிண்ண தொடர் ஆரம்பம்! ஏப். 15 இல் இந்திய அணி அறிவிப்பு!!
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மே மாதம் 30 ஆம் திகதி முதல் ஜூலை 14ஆம் திகதி ஷ வரை இங்கிலாந்தில் நடைபெறுகின்றது.
ஆஸ்திரேலியா, இந்தியா, தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி வருகிற 15ஆம் திகதி மும்பையில் அறிவிக்கப்படுகிறது. எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வு குழு 15 வீரர்களை தேர்வு செய்து அறிவிக்கிறது.
இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஜூன் 5-அம் திகதி தென்ஆப்பிரிக்காவை சந்திக்கிறது.