பாகிஸ்தானை தனிமைப்படுத்திவிட்டோம்! இந்தியா மகிழ்ச்சி

இஸ்லாமிய நாடுகள் மத்தியில் பாகிஸ்தானை தனிமைப்படுத்துவதில் இந்தியா வெற்றி கண்டுள்ளதாக சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.

ஐதராபாத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சுஷ்மா சுவராஜ் இந்த தகவலை வெளியிட்டார்.

இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் முதல் மாநாடு 1969 ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் இந்தியா கலந்துகொண்ட போது, பாகிஸ்தான் கொடுத்த அழுத்தத்தால், அதன் பின்பு இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கவில்லை.

ஆனால், இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகளின் 50 ஆண்டு கூட்டத்தில், பாகிஸ்தானின் அழுத்தத்தையும் தாண்டி இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும்
அதன்பேரில் இந்தியா கலந்து கொண்டது. இஸ்லாமிய நாடுகளுடான இந்தியாவின் உறவை மோடி வலுவாக்கியுள்ளார். மோடியின் வெளிநாட்டு பயணத்துக்கு கிடைத்த வெற்றி இதுவாகும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *