எமது உரிமை, அதிகாரத்தை அனுபவிக்க இடமளியுங்கள்! – சபையில் சம்பந்தன் வலியுறுத்து

“தமிழ் மக்களுக்கும் இறைமை உண்டு. எங்கள் அதிகாரம், எங்கள் உரிமைகளை நாங்கள் அனுபவிக்க இடமளிக்க வேண்டும்.”

– இவ்வாறு சபையில் வலியுறுத்தினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.

2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மீதான இறுதி வாக்கெடுப்பு நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இதற்கான இறுதி விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தற்போதைய அரசால் புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தபோதிலும், தற்போது அந்தப் பணிகள் கைவிடப்பட்டுள்ளன. எதற்காக அந்தப் பணிகள் கைவிடப்பட்டன என்று தெரியவில்லை.

தமிழ் மக்களுக்கும் இறைமை உண்டு. எங்கள் அதிகாரம், எங்கள் உரிமைகளை நாங்கள் அனுபவிக்க இடமளிக்க வேண்டும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *