புலமைப் பரிசிலுக்குப் பதிலாக 8ஆம் தரத்தில் போட்டிப் பரீட்சை! – ஜனாதிபதி அறிவிப்பு

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குப் பதிலாக 8ஆம் தரத்தில் போட்டிப் பரீட்சை ஒன்றை நடத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதற்குரிய நடவடிக்கை குறித்து தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கடவத்தையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி மைத்திரிபால இவ்வாறு கூறினார்.

புலமைப் பரிசில் பரீட்சையை இரத்துச் செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது என அண்மையில் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *