ஒரு இரவுக்கு ரூ.40,000! இளம் பெண்களைப் போதைக்கு அடிமையாக்கி விபசாரத்தில் தள்ளிய கும்பல் வசமாக சிக்கியது!

இளம் பெண்களை ஏமாற்றி கொழும்புக்கு அழைத்து போதைக்கு அடிமையாக்கி, விபசாரத்தில் தள்ளும் மோசடிக் கும்பல் பற்றிய அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டின் பல பாகங்களிலும் இந்தக் கும்பல் கைவரிசையை காட்டி, ஏராளம் பெண்களை சீரழித்துள்ளது.

கொழும்பு தனியார் ஊடகமொன்று இரகசியமாகப் படம்பிடித்த காட்சிகளுடன், வீடியோ தொகுப்பொன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவிலேயே மேற்படி கும்பல் தொடர்பான அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

கொட்டாவ, மஹல்வராவ பகுதியில் இயங்கும் அழகுநிலையம் ஒன்றில் பணிபுரிவதற்கு ஆள்தேவையென கூறியே இளம் பெண்களுக்கு வலைவீசப்படுகின்றது.

வறுமை, வேலையின்மை போன்ற பிரச்சினைகளைப் பாவித்து இளம் பெண்களை வலையில் வீழ்த்தி, இங்கு அழைத்துச் செல்கிறார்கள்.

பின்னர் கஞ்சா, ஹசிஷ் போன்ற போதைப்பாவனைக்குப் பெண்களை அடிமையாக்கி, விபசாரத்தில் ஈடுபடுத்தப்படுகின்றார்கள். நீண்டகாலமாக இந்த சட்டவிரோத செயற்பாடு நடந்து வருகின்றது.

38 வயதான பெண் ஒருவரும், 17 வயதான இளைஞர் ஒருவருமே இந்த மோசடியின் சூத்திரதாரிகள்.

அழகுநிலையத்தில் பணியாற்றவென இந்தக் குழு அழைத்து வரும் பெண்கள், அவர்களுக்கே தெரியாமல் விற்பனை செய்யப்படுகின்றார்கள்.

பல இடைத்தரகர்களைக் கொண்டு, பெரும் வலையமைப்பாக இந்தக் கும்பல் இயங்கியுள்ளது. பெண்களின் புகைப்படங்களை கையடக்கத் தொலைபேசியில் வைத்திருக்கும் தரகர்கள், வாடிக்கையாளர்களை அடையாளம் கண்டு, புகைப்படங்களைக் காண்பித்து விருப்பமான பெண்ணைத் தெரிவுசெய்யக் கோருகின்றார்கள். தொலைபேசி வழியாகத் தொடர்புகொள்பவர்களின் கையடக்கத் தொலைபேசிகளுக்கு பெண்களின் படங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இந்த நடவடிக்கையை வழிடத்தும் பெண்ணுடன் தரகர்கள் தொலைபேசி வழியாகவே தொடர்பு கொள்கிறார்கள். குறிப்பிட்ட பெண்ணை புக் செய்தால், ஏற்பாடு செய்யப்படும் இடமொன்ருக்கு ஆண்கள் வரவைக்கப்படுகிறார்கள். அந்தப் பெண்களுடன் ஒரு இரவைக் கழிக்க 40,000 ரூபா அறவிடப்படுகின்றது.

ஒரு இரவுக்கு 40,000 ரூபா வீதம் ஒரு பெண்ணை புக் செய்தால், பின்னர் பெண்ணுக்கும், புக் செய்பவருக்கும் போதைப்பொருள் வழங்கப்படுகின்றது. இந்த மோசடிக் கும்பலில் உள்ள 17 வயதான இளைஞரே அதனைச் செய்கிறார்.

இளம் பெண்களைப் போதைக்கு அடிமையாக்கிய பின்னர், புக் செய்பவருடம் ஒப்படைக்கிறார்கள்.

வேலைவாய்ப்பின்மை, வறுமை போன்ற காரணங்களால் இந்தக் கும்பலின் பிடியில் சிக்கிய சில இளம் யுவதிகள், அங்கிருந்து வெளியேற முயற்சிக்காமல், அந்தக் கும்பலின் பிடியிலேயே தங்கியிருந்துள்ளார்கள்.

தனியார் ஊடகம் இது தொடர்பான வீடியோக்களை வெளியிட்டுள்ளது. அந்தக் கும்பலையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *