சித்தியடைந்தோர் வீதம் வடக்கு, கிழக்கில் குறைவு! – முதல் 10 இடங்களுக்குள் சிங்கள மாணவர்கள் மட்டும்

2018ஆம் ஆண்டு ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெற்றவர்களில் தேசிய ரீதியில் முதல் பத்து இடங்களுக்குள் வடக்கு – கிழக்கைச் சேர்ந்த எந்தவொரு மாணவரும் இடம்பிடிக்கவில்லை. அத்துடன், வடக்கு – கிழக்கில் மாணவர்களின் சித்தி வீதமும் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் குறைவாகவே உள்ளது.

அதனடிப்படையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 17 ஆயிரத்து 495 பேர் பரீட்சைக்குத் தோற்றி 6 ஆயிரத்து 337 பேர் மட்டுமே உயர்தரத்தைத் தொடர்வதற்கான சித்தியைப் பெற்றுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 4 ஆயிரத்து 405 பரீட்சார்த்திகளில் ஆயிரத்து 434 மாணவர்கள் மட்டுமே உயர்தரத்தைத் தொடர்வதற்கான தகுதியைப் பெற்றுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 3 ஆயிரத்து 494 பரீட்சார்த்திகளில் ஆயிரத்து 246 பரீட்சாத்திகள் மட்டுமே உயர்தரத்தைத் தொடர்வதற்கான சித்தியைப் பெற்றுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 638 பரீட்சார்த்திகளில் ஆயிரத்து 321 மாணவர்கள் மட்டுமே உயர்தரத்தைத் தொடர்வதற்கான தகுதியைப் பெற்றுள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் 5 ஆயிரத்து 143 பரீட்சார்த்திகளில் ஆயிரத்து 929 மாணவர்கள் மட்டுமே உயர்தரத்தைத் தொடர்வதற்கான சித்தியைப் பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *