இராணுவச் சிப்பாய் தூக்கிட்டு தற்கொலை!
குருவிட்ட இராணுவ முகாமில் பணியாற்றும் சிப்பாய் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
முகாமின் தங்கும் விடுதியின் கூரையில் கட்டப்பட்ட கயிற்றில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
கம்புறுப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.
தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பில் குருவிட்ட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.