ஒரு மாதத்துக்கு இலங்கையை இருள் சூளும்! – 4 மணிநேர மின்வெட்டு தொடரும்

நாட்டில் நேற்று (26) முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள மின்வெட்டு ஒரு மாதம் வரை நீடிக்கும் என மின்சக்தி மற்றும் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் செயலாளர் சுரேன் படகொட தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,

” மின்சார நெருக்கடியை தீர்ப்பதற்கு இம்மாத இறுதிக்குள், மாற்று வழிகள் மூலம் இ  நடவடிக்கை எடுக்கப்படும்.

இதன்படி எதிர்வரும் காலத்தில் தனியார் துறையிடமிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தகாலம் முடிவடைந்து தற்போது மூடப்பட்டுள்ள மாத்தறை மின்நிலையம் மற்றும் ஏஷியா பவர் ஆகிய மின்நிலையங்களின் ஒப்பந்தகாலத்தை மேலும் 2 வருடங்களுக்கு நீடிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றும் அவர் கூறினார்.

பகலில் மூன்றுமணிநேரம், இரவில் ஒருமணிநேரம் என நாளொன்றுக்கு நான்கு மணிநேரம் மின்வெட்டு அமுலில் உள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *