நாளை முதல் இருளில் மூழ்கும் இலங்கை! 4 மணிநேரம் மின்வெட்டு!!

நாடு முழுவதும் நாளை முதல் இரண்டு கட்டங்களின்கீழ் 4 மணிநேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இதன்படி காலை 8.30 மணி முதல் 11.30 மணி வரை அல்லது 11.30 முதல் 2.30 வரையான
3 மணித்தியாலங்களும்,
மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை அல்லது 7.30 மணி முதல் 8.30 மணி வரையும் மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும்  அதிக வெப்பத்துடனான வானிலையால் அதிகரித்த மின்சார தேவையை பூர்த்திசெய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வரட்சியுனான வானிலையால், நாளாந்தம் பகல் வேளையில் 2,350 மெகாவோட் மின்சாரத்திற்கான கேள்வி காணப்படுகின்ற போதிலும் 1,950 மெகாவோட் மின்சாரத்தையே விநியோகிக்க முடிவதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *