யாழில் பாழடைந்த வீட்டில் இருந்து வயோதிபப் பெண் சடலமாக மீட்பு!
யாழ். வடமராட்சிப் பகுதியில், பாழடைந்த வீடொன்றில் இருந்து வயோதிபப் பெண் ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு மீட்கப்பட்டவர், புலோலி கிழக்கைச் சேர்ந்த சோமஸ்கந்தன் விசாலாட்சி (வயது – 80) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த பெண் மணி கடந்த 20ஆம் திகதி காணாமல்போயிருந்த நிலையில், இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம், பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் பருத்தித்துறைப் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.