கணவனைக் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்த மனைவி!
கொட்டாவ , பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் அவரது மனையினால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மனைவியுடன் குறித்த நபருக்கு கருத்து மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்தச் சம்பவம் ஏற்பட்டுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
உடல் முழுவதும் வெட்டுக்காயங்களுக்குள்ளான கணவன் ஆபத்தான நிலையில் ஹோமாகம வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
பன்னிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடையவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
அவரின் மனைவி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கொட்டாவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.