நடுவீதியில் பற்றிஎரிந்தது சுற்றுலா பஸ்- 26 பேர் உடல் கருகி பலி!

சீனாவில் சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற பேருந்து திடீரென தீப்பிடித்ததில் 26 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

சீனாவின் ஹுனான் மாகாணம் சாங்தே நகரில் 50க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளுடன் நேற்று மாலை ஒரு பேருந்து சென்றுகொண்டிருந்தது.

நெடுஞ்சாலையில் வேகமாக சென்றுகொண்டிருந்தபோது பேருந்தின் ஒரு பகுதியில் தீப்பிடித்தது.

வேகமாக சென்றதால் காற்றின் வேகம் காரணமாக, சிறிது நேரத்தில் பேருந்து முழுவதும் தீப்பற்றியது. உள்ளே இருந்தவர்கள் தீக்காயங்களுடன் அலறித் துடித்தனர்.

தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து கடுமையாக போராடி தீயை அணைத்தனர். இந்த கோர விபத்தில் 26 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 28 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
விபத்து தொடர்பாக பேருந்தின் இரண்டு டிரைவர்களையும் போலீசார் கைது செய்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *