வீட்டில் தூக்கில் தொங்கி குடும்பஸ்தர் தற்கொலை!
நொச்சியாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொரவக்கந்த பகுதியில் உள்ள வீடொன்றின் அறையில் நபர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நொச்சியாகம, மொரவக்கந்த பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் நொச்சியாகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் நொச்சியாகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.