கைநழுவியது பட்ஜட்டை தோற்கடிக்கும் வாய்ப்பு! – சு.க. மீது மஹிந்த பாய்ச்சல்

தற்போதைய அரசின் மக்களுக்கு விரோதமான வரவு – செலவுத் திட்டத்தைத் தோற்கடிப்பதற்குக் கிடைத்த வாய்ப்பு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் இழக்கப்பட்டது என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தனது ஆட்சியின்போது எடுத்த கடன்களுக்கு சரிசமனான அபிவிருத்திகளைச் செய்ததாகவும், இருப்பினும் தற்போதைய அரசின் கடன்களுக்கு ஏற்ப அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுப்பதைக் காணக்கூடிய விதத்தில் இல்லை எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

மாத்தளைப் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *