கோட்டா அல்ல எந்தக் கொம்பன் களமிறங்கினாலும் ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.கவுக்கே வெற்றி!!
கோட்டாபய ராஜபக்ச அல்ல, எந்தக் கொம்பன் களமிறங்கினாலும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியே வெற்றிவாகைசூடும் என்று இராஜாங்க அமைச்சர் அசோக்க அபேசிங்க தெரிவித்தார்.
எதிர்வரும் டிசம்பரில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணியின் பொது வேட்பாளராகக் கோட்டாபய ராஜபக்சவைப் போட்டியிட வைப்பதற்கு மஹிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளார் எனச் செய்தி வெளியாகி இருந்தது.
இந்நிலையில், கோட்டாபய ராஜபக்ச போட்டியிட்டால் அது ஐ.தே.கவுக்கு சவாலாக அமையுமா என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
”55 சதவீத வாக்குகளுடன் தேர்தலில் வெற்றிபெறும் வேட்பாளர் எமது கைவசம் இருக்கின்றார். ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தே இம்முறை பொதுவேட்பாளர் களமிறங்குவார்.
எனவே, கோட்டாபய அல்ல எந்த வேட்பாளர் போட்டியிட்டாலும் ஐ.தே.கவே வெற்றிபெறும்” – என்றார்.