பள்ளிவாசல்மீது துப்பாக்கிச்சூடு! பலர் பலி!! – உயிர்தப்பினர் வங்கதேசத்து கிரிக்கெட் வீரர்கள்
கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள மசூதியில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதையடுத்து, நிகழ்விடத்தை பொலிஸார் சுற்றிவளைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நியூசிலாந்து நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள மசூதி ஒன்றில் அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
உள்ளூர் பொலிஸார் மசூதியை சுற்றி வளைத்து பதிலடி கொடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதற்கிடையே, துப்பாக்கிச்சூடு நடைபெற்ற ஹாக்லே பார்க் பகுதியில் உள்ள மசூதிக்கு வங்காளதேச கிரிக்கெட் வீரர்கள் சென்று இருந்ததாகவும் எனினும் பத்திரமாக திரும்பியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
வங்காளதேச கிரிக்கெட் வீரர் தமிம் இக்பாலும் இந்த தகவலை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மிகவும் அபாயகரமான அனுபவமாக இருந்ததாக தமிம் இக்பால் தெரிவித்துள்ளார்.
பொலிஸாருக்கும் துப்பாக்கி ஏந்திய நபர்களுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடப்பதாக உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிறிஸ்ட்சர்ச் பகுதி வாசிகள், வீதிகளுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் சந்தேகத்துகுரிய நடமாட்டங்கள் குறித்து உடனடியாக தகவல் அறிவிக்க வேண்டும் எனவும் கிறிஸ்ட்சர்ஸ் போலீசார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச்சூடு தொடர்பாக ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வேறு யாரேனும் உள்ளார்களா? என பொலிஸார் தேடி வருகின்றனர்.