‘வீறுகொண்டெழு பெண்ணே புதுயுகம் காண்போம்’ – இ.தொ.காவின் மகளிர் தின நிகழ்வு!

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மகளிர் தின நிகழ்வு, ‘ வீறுகொண்டெழு பெண்ணே, புதுயுகம் காண்போம்’ எனும் மகுடத்தின்கீழ் நேற்று (10) மாலை ஹட்டன், டி.கே.டபிள்யூ கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

கட்சியின் மகளிர் அணித் தலைவியான அனுஷியா சிவராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கட்சித் தலைவரான ஆறுமுகன் தொண்டமான் எம்.பி., மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர்கள் உட்பட மேலும் பல பிரமுகர்கள் பங்கேற்றிருந்தனர்.

பெண்களின் பங்குபற்றலுடன்   கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், இ.தொ.காவின் மகளிர் அணித் தலைவி உட்பட மேலும் சில பெண்களின் சேவையைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

க.கிசாந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *