200 பெண்கள் 20 ஆண்களால் கற்பழிப்பு! – சின்மயி அதிர்ச்சித் தகவல்
பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை கூறியிருந்தவர் பாடகி சின்மயி. இவரது இந்த புகாரால் #metoo என்ற ஹாஸ்டேக் பிரபலமானது.
இந்தச் சம்பவத்திலிருந்தே சின்மயி சினிமாவைத் தாண்டி வெளியில் நடக்கும் விடயங்களைப் பற்றியும் தனது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றார்.
அப்படித்தான் தற்போது அனைவரையும் அதிர்ச்சியாக்கிய பொள்ளாச்சி இளம்பெண் கூட்டு பலாத்காரத்தை பற்றியும் பேசியுள்ளார்.
இது குறித்து டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்ட பதிவில், “இதுவரை பொள்ளாச்சியில் மட்டும் 200 பெண்கள் 20 ஆண்களால் கற்பழிக்கப்பட்டுள்ளனர். நாடு எங்கு செல்கின்றது? இதுகுறித்து எதாவது கைது நடந்துள்ளதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.