ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தற்கொலைத் தாக்குதல்! – 17 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 17 பேர் பலியாகினர்.

கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஜலாலாபாத் விமான நிலையத்திற்கு அருகே உள்ள கட்டுமான நிறுவனத்தின் மீது பயங்கரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்தினர்.

இந்தத் தாக்குதலில் 16 பேர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் வைத்தியசாலையில் உயிரிழந்ததால் பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது.

மேலும், 9 பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தாக்குதல் நடத்திய 5 பயங்கரவாதிகளில் 2 பேர் தங்கள் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்த நிலையில், மீதம் இருந்த 3 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் உடனடியாகப் பொறுப்பேற்கவில்லை. இந்தத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுவதால், பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *