‘பட்ஜட்’ குறித்து ஆராய்ந்தே முடிவு என்கிறார் சம்பந்தன்
“2019ஆம் ஆண்டுக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசின் வரவு – செலவுத் திட்டத்தை ஆதரிப்பதா? இல்லையா? என்பது குறித்து ஆராய்ந்து முடிவு எடுப்போம்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
புதிய பட்ஜட் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கடனிலிருந்து நாட்டை மீட்டெடுப்பது, நாட்டின் வருவாய் மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது போன்றவை இந்த வரவு – செலவுத் திட்டத்தில் அடங்கவில்லை. ஆனால், இந்த வரவு – செலவுத் திட்டத்தில் மக்களுக்கு நன்மைகள் உள்ளனவா என்பதைக் கூறுவதை விடவும் தீமைகள் இல்லை எனக் கூறலாம்” – என்றார்.