சாய்ந்தமருது தக்வா ஜும்மா பள்ளிவாசலுக்கு மின்விசிறிகளை வழங்கினார் யஹியாகான்!

சாய்ந்தமருது தக்வா ஜும்மா பள்ளிவாசலுக்கு ஒரு தொகை மின்விசிறிகளை வழங்கி வைத்தார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் அம்பாறை மாவட்ட பொருளாளருமான ஏ.சி யஹியாகான்.

சாய்ந்தமருது தக்வா ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகத்தினர், யஹியாகானை அவரது காரியாலயத்துக்கு சென்று சந்தித்து பள்ளிவாசலுக்கு மின்விசிறிகள் தேவைப்படுகின்றன எனவும், இன்னும் சில தேவைகள் இருக்கின்றன எனவும், அவரைப் பள்ளிக்கு வந்து பார்க்கும்படியும் கோரிக்கை விடுத்திருந்தார்கள்

ஆனால், ஏ.சி யஹியாகான் அந்த இடத்திலேயே தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஒரு தொகை மின்விசிறிகளைக் கொண்டுவந்து சாய்ந்தமருது தக்வா ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகத்தினரிடம் உடனடியாகக் கையளித்திருந்தார்.

அதனைப் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் பெற்றுக்கொள்வதைப் படத்தில் காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *