அரச ஊழியர்களுக்கு ரூ. 2,500 விசேட கொடுப்பனவு!
2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு 2,500 ரூபா விசேட கொடுப்பனவு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அனைத்து அரச ஊழியர்களுக்குமான இடைக்கால மாதாந்தக் கொடுப்பனவாக 2019 ஜூலை மாதம் 01 ஆம் திகதியிலிருந்து 2,500 ரூபாவை வழங்குவதற்குத் தான் முன்மொழிவதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.