2019ஆம் ஆண்டுக்கான பட்ஜட் சபையில் இன்று சமர்ப்பிப்பு!

2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இன்று பிற்பகல் 2 மணியளவில், நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதையடுத்து, வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் மீதான விவாதம், நாளை ஆரம்பமாகும். 12ஆம் திகதி வரை நடக்கும் விவாதத்தின் முடிவில் வாக்கெடுப்பு நடத்தப்படும்.

வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பின் மீதான விவாதம், மார்ச் 13ஆம் திகதி ஆரம்பமாகி, ஏப்ரல் 5ஆம் திகதி முடிவடையும். அன்றைய நாள் இறுதி வாக்கெடுப்பு இடம்பெறும்.

தற்போதைய அரசால் சமர்ப்பிக்கப்படும், ஐந்தாவது வரவு – செலவுத் திட்டம் இதுவாகும்.

இதன்படி, 2019இல் நாட்டின் தேசிய வருமானம், 2400 பில்லியன் ரூபாவாக இருக்கும் என்றும், மொத்த செலவீனம் 4550 பில்லியன் ரூபாவாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் வரவு – செலவுத்திட்ட பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 4.5 வீதமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *