‘வடகொரியாவுக்கு எதிர்காலம் இல்லை’ – ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை!
எனினும் கொரிய தீபகற்பத்தை அணுஆயுதமற்ற பிரதேசமாக மாற்றும் வகையில் வடகொரியா அணுஆயுதங்களை முழுமையாக கைவிட வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்துகிறது.
இது குறித்து பேசி முடிவு எடுப்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் கடந்த மாத இறுதியில் வியட்நாமில் 2-வது முறையாக சந்தித்து பேசினர்.
ஆனால், இந்த 2 நாள் சந்திப்பு, எந்த உடன்பாடும் எட்டப்படாமல் முடிவுக்கு வந்தது. வடகொரியா தங்கள் மீதான பொருளாதார தடை முழுவதையும் நீக்க வேண்டும் என கேட்டதை அமெரிக்கா ஏற்காததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக அமெரிக்கா தரப்பில் கூறப்பட்டது.
ஆனால் இதனை மறுத்த வடகொரியா, தாங்கள் பாதியளவு பொருளாதார தடைகளையே நீக்க கோரியதாக தெரிவித்தது. மேலும் இனி பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு இல்லை எனவும் கூறியது.
இந்த நிலையில், அணுஆயுதங்களை கைவிடாதவரை வடகொரியாவுக்கு எதிர்காலம் கிடையாது என டிரம்ப் திட்டவட்டமாக கூறினார். மேரிலாந்து மாகாணத்தில் நடைபெற்ற பழமைவாத அரசியல் நடவடிக்கை மாநாட்டின் நிறைவு விழாவில் பேசியபோது அவர் இதனை தெரிவித்தார்.
இது பற்றி அவர் கூறுகையில், “அணுஆயுதங்களை முழுமையாக கைவிடுவது தொடர்பாக வடகொரியா ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டால், நம்பமுடியாத மற்றும் அற்புதமான பொருளாதார வளர்ச்சியை அந்நாடு அடையும்.
இதற்கிடையே வடகொரியா உடனான உறவை பலப்படுத்தும் விதமாக தென்கொரியாவில் ஆண்டு தோறும் நடைபெறும் அமெரிக்க, தென்கொரிய படைகளின் கூட்டுப்பயிற்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
அப்போது, ஆண்டு தோறும் மார்ச் முதல் வாரத்தில் தொடங்கி 10 நாட்கள் நடைபெறும் மிகப்பெரிய அளவிலான இருநாட்டு படைகளின் கூட்டுப்பயிற்சி முடிவுகொண்டு வர இருதரப்பிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.