போதைப்பொருட்களுடன் 3 பெண்கள் உட்பட 17 பேர் மாட்டினர்!
மாத்தறை, பொல்ஹேன பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த பெண்கள் மூவர் உட்பட 17 பேர் கொக்கேய்ன் மற்றும் ஏனைய போதைப்பொருட்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்று மதியம் 12 மணியளவில் மாத்தறை குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.