2 குடும்பஸ்தர்கள் விபத்துகளில் பலி!
இரு வேறு விபத்துகளில் குடும்பஸ்தர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மன்னார் – யாழ்ப்பாணம் இளுப்பங்கடவை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் பலத்த காயமடைந்த நபர் முலங்கோவில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இளுப்பங்கடவை பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, நீர்கொழும்பு, கொப்பரா சந்தியில் லொறி ஒன்றுடன் மோதி 65 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் லொறி ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.