மகளிர் கல்லூரிக்குள் அத்துமீறி அட்டகாசம்! – 34 மாணவர்கள் கைது
கொள்ளுப்பிட்டிப் பிரதேசத்தில் அமைந்துள்ள மகளிர் கல்லூரியொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து பட்டாசுகளைக் கொளுத்தி, அங்கிருக்கும் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் இரண்டு பாடசாலைகளைச் சேர்ந்த 34 மாணவர்களைக் கைதுசெய்துள்ளளோம் எனக் கொள்ளுப்பிட்டிப் பொலிஸார் தெரிவித்தனர்.
கல்கிஸை மற்றும் பம்பலப்பிட்டிப் பிரதேசங்களைச் சேர்ந்த இரு பாடசாலைகளின் மாணவர்களே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.