சர்வகட்சிக் குழுக் கூட்டத்தை ஜே.வி.பி. புறக்கணித்தது ஏன்?
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற சர்வகட்சிக் குழுக் கூட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) பங்கேற்கவில்லை. தமது கட்சி இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதில்லை என்று தீர்மானம் எடுத்துள்ளதாக அந்தக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கு அமைவாக சர்வகட்சிக் குழுக் கூட்டம் நேற்றுக் கூட்டப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளாமை தொடர்பில் அந்தக் கட்சியின் தலைவரிடம் கேட்டபோது,
“எமது கட்சி இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதில்லை என்று தீர்மானம் எடுத்துள்ளது. இதனை மாத்திரமே இப்போது சொல்ல முடியும்” என்று பதிலளித்தார்.
மக்கள் விடுதலை முன்னணி நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கும் 20ஆவது திருத்தத்தைக் கொண்டு வருவதற்கு முயற்சிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.