பிரபல பாதாளக்குழு உறுப்பினரான ‘தெமட்டகொட ருவன்’ உள்ளிட்ட 8 பேர் கைது!

திட்டமிட்டு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த பிரபல பாதாளக்குழு உறுப்பினரான தெமட்டகொட ருவன் உள்ளிட்ட 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைதுசெய்யப்பட்ட குறித்த 8 பேரில் பாகிஸ்தான் தம்பதியினரும் அடங்குகின்றனர்.

சந்தேகநபர்களிடமிருந்து துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள், பணம் எண்ணுவதற்குப் பயன்படுத்தப்படும் 2 கருவிகள், 4 கிராம் ஹெரோயின் மற்றும் 3 சொகுசு வாகனங்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

தெமட்டகொட பகுதியிலுள்ள வீடு சுற்றிவளைக்கப்பட்டபோதே சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட தெமட்டகொட ருவன் என்பவர் பிரபல பாதாளக் குழுத் தலைவரான தெமட்டகொட சமிந்தவின் சகோதரர் எனப் பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *