டுபாயிலிருந்தே பெருந்தொகை ஹெரோயின் இலங்கைக்கு கடத்தப்பட்டது! பின்புலத்தில் மதூஷ் குழுவா?

இலங்கையில் கைப்பற்றப்பட்ட பெருந்தொகையான போதைப்பொருள் கடத்தலுக்கும்,  மாகந்துர மதூஷின் குழுவுக்குமிடையில் எவ்வித தொடர்பும் கிடையாது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

டுபாயிலிருந்தே  குறித்த போதைப்பொருள் இலங்கைக்கு அனுப்பட்டுள்ளது என்றும், தெற்காசிய நாடொன்றிலுள்ள போதைப்பொருள் கடத்தல் காரர் ஒருவரும் இதனுடன் தொடர்புபட்டுள்ளார் என்றும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாட்டில் பதுங்கியுள்ள இலங்கையைச்சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர்  ஒருவரால்  வழங்கப்பட்ட தகவலுக்கமைய, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினரும், பொலிஸ் விசேட அதிரப்படையினரும் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

இதையடுத்தே கொள்ளுப்பிட்டி, வர்த்தக கட்டடத் தொகுதியின் வாகன தரிப்பிடத்தில் வைத்து இருவர் மடக்கப்பிடிக்கப்பட்டனர்.

சிறிய ரக வேன்கள் இரண்டில் இருந்து 294 கிலோ 490 கிராம் நிறையுடைய ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டது.இந்த போதைப்பொருள் 3,533 மில்லியன் ரூபா பெறுமதியுடையதாகும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *