ஐ.நா. தீர்மான இணை அனுசரணை: மீளப்பெற மைத்திரி ஆலோசனை…!
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 2015இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு வழங்கிய இணை அனுசரணையை மீளப்பெற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசித்துள்ளார்.
”அதனை (இணை அனுசரணையை) விலக்கிக்கொள்ள முடியும் என நான் விரும்புகின்றேன.அதற்கான பேச்சுகள் தற்போது இடம்பெறுகின்றன” என்று ‘சண்டே ரைம்ஸ்’ வார இதழுக்கு அவர் வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.
“ஐ.நா. தீர்மானத்தின் ஊடாக இராணுவத்தைத் தண்டிக்க ஒருபோதும் இடமளியேன்” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.