கொழும்புக்கு வருகின்றார் சமந்தா பவர்!

ஐ.நாவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் சமந்தா பவர் இந்த வாரம் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

அரசியல் வாழ்வில் 30 ஆண்டுகளை நிதி அமைச்சர் மங்கள சமரவீர நிறைவு செய்வதை முன்னிட்டு கொழும்பில் நடைபெறவுள்ள நிகழ்வில் பங்கேற்கவே சமந்தா பவர் வரவுள்ளார்.

இந்த நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் எதிர்வரும் 28ஆம் திகதி பிற்பகல் 3 மணியவில் நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *